கோவையில் டிசம்பர் இறுதிக்குள் ராமானுஜன் கணிதப் பூங்கா திறப்பு: மாநகராட்சி திட்டம்

கோவை வ.உ.சி பூங்கா வளாகத்தில் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 'ராமானுஜன் கணிதப் பூங்கா' கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் திறக்க மாநகராட்சி திட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி பூங்கா வளாகத்தில் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பான 'ராமானுஜன் கணிதப் பூங்கா' உருவாகி வருகிறது. இந்த பூங்கா 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

கணிதம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகளையும் மாதிரிகளையும் பள்ளி மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பூங்காவை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த கணிதப் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இங்கு கணிதத்துறை சார்ந்த மாதிரிகள், எண்கள், வடிவங்கள் ஆகியவை நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் குழந்தைகள் விளையாட்டோடு கணித அறிவையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இது போன்ற தனித்துவமான கணிதப் பூங்கா அமைவது இதுவே முதல் முறையாகும். இந்த பூங்கா திறக்கப்பட்டவுடன் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைவர் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...