கோவையில் டிசம்பர் இறுதிக்குள் ராமானுஜன் கணிதப் பூங்கா திறப்பு: மாநகராட்சி திட்டம்

கோவை வ.உ.சி பூங்கா வளாகத்தில் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 'ராமானுஜன் கணிதப் பூங்கா' கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் திறக்க மாநகராட்சி திட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி பூங்கா வளாகத்தில் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பான 'ராமானுஜன் கணிதப் பூங்கா' உருவாகி வருகிறது. இந்த பூங்கா 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

கணிதம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகளையும் மாதிரிகளையும் பள்ளி மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பூங்காவை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த கணிதப் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இங்கு கணிதத்துறை சார்ந்த மாதிரிகள், எண்கள், வடிவங்கள் ஆகியவை நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் குழந்தைகள் விளையாட்டோடு கணித அறிவையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இது போன்ற தனித்துவமான கணிதப் பூங்கா அமைவது இதுவே முதல் முறையாகும். இந்த பூங்கா திறக்கப்பட்டவுடன் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைவர் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...