கோவையில் டிசம்பர் இறுதிக்குள் ராமானுஜன் கணிதப் பூங்கா திறப்பு: மாநகராட்சி திட்டம்

கோவை வ.உ.சி பூங்கா வளாகத்தில் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 'ராமானுஜன் கணிதப் பூங்கா' கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் திறக்க மாநகராட்சி திட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி பூங்கா வளாகத்தில் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பான 'ராமானுஜன் கணிதப் பூங்கா' உருவாகி வருகிறது. இந்த பூங்கா 50 சென்ட் நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

கணிதம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகளையும் மாதிரிகளையும் பள்ளி மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பூங்காவை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த கணிதப் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இங்கு கணிதத்துறை சார்ந்த மாதிரிகள், எண்கள், வடிவங்கள் ஆகியவை நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் குழந்தைகள் விளையாட்டோடு கணித அறிவையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இது போன்ற தனித்துவமான கணிதப் பூங்கா அமைவது இதுவே முதல் முறையாகும். இந்த பூங்கா திறக்கப்பட்டவுடன் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைவர் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...