கோவை வடக்கு வட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார்; CRPF வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். யானைகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை வடக்கு வட்டத்தில் உள்ள CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு வருவாய் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த வட்டத்தின் உள்ளேயே ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர் தங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 18 அன்று பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அன்று இரவு CRPF வளாகத்தில் தங்கினார். இப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், CRPF வளாகத்திற்கு சுற்றியும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அன்று இரவு தங்கினர். மேலும், மறுநாள் காலை 10 மணி வரை மீண்டும் இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...