பொள்ளாச்சி நகராட்சியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். வார்டுகளில் நேரடி ஆய்வு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி.



கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகர மன்ற தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நேரடியாக தினசரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.





இந்த ஆய்வின் போது, வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பள்ளி வகுப்பறை, கழிப்பிடம், சமையலறை கூடம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.



மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...