அன்னூர் அருகே வீட்டில் புகுந்து நகை கொள்ளை: ஒருவர் கைது

கோவை அன்னூர் அருகே கல்ராசிபாளையத்தில் பகல் நேரத்தில் வீட்டில் புகுந்து 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்ראசிபாளையம் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கல்ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 13ஆம் தேதி வெளியில் சென்றிருந்தார்.



அப்போது பகல் நேரத்தில் காரில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.



அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர்.

வீட்டிற்கு திரும்பிய தங்கவேல், திருட்டு சம்பவம் குறித்து அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற முனியாண்டியை கைது செய்தனர்.

கைதான நபரிடமிருந்து எட்டு சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...