மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலைகளை பிடிக்க 24 மணி நேரமாக வனத்துறையினர் முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை, பட்டக்காரனூர் குட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரண்டு முதலைகள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டது.

குட்டையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், அதனை வெளியேற்றி முதலைகளை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.



நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.

இரவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டன. முதலைகள் உள்ள பகுதியை சுற்றி நைலான் வலைகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினரின் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் இரவு பகல் பாராமல் முதலைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தற்போது மூன்று அடி அளவிற்கு தண்ணீர் மற்றும் சேறு உள்ள நிலையில், அவற்றை அகற்றிய பின்னர் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...