மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலைகளை பிடிக்க 24 மணி நேரமாக வனத்துறையினர் முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை, பட்டக்காரனூர் குட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரண்டு முதலைகள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டது.

குட்டையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், அதனை வெளியேற்றி முதலைகளை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.



நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.

இரவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டன. முதலைகள் உள்ள பகுதியை சுற்றி நைலான் வலைகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினரின் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் இரவு பகல் பாராமல் முதலைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தற்போது மூன்று அடி அளவிற்கு தண்ணீர் மற்றும் சேறு உள்ள நிலையில், அவற்றை அகற்றிய பின்னர் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...