மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலைகளை பிடிக்க 24 மணி நேரமாக வனத்துறையினர் முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை, பட்டக்காரனூர் குட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரண்டு முதலைகள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டது.

குட்டையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், அதனை வெளியேற்றி முதலைகளை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.



நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.

இரவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டன. முதலைகள் உள்ள பகுதியை சுற்றி நைலான் வலைகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினரின் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் இரவு பகல் பாராமல் முதலைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தற்போது மூன்று அடி அளவிற்கு தண்ணீர் மற்றும் சேறு உள்ள நிலையில், அவற்றை அகற்றிய பின்னர் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...