சிறுதுளி அமைப்புக்கு நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தேசிய விருது

சிறுதுளி அமைப்பு CSR Universe-ன் தேசிய மாநாட்டில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருதினை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒரு அமைப்பிற்கு மட்டுமே விருது வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: சிறுதுளி அமைப்பு தேசிய அளவிலான சிறந்த சமூக மாற்றத்திற்கான விருதினை பெற்றுள்ளது. CSR Universe-ன் தேசிய மாநாடு மற்றும் சமூக மாற்றத்திற்கான 4ஆம் ஆண்டு விழாவில் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலிருந்து 489 நிறுவனங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்தன. அதில் 38 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சிறுதுளி அமைப்பிற்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அமுமு அறக்கட்டளை, EID Parry மற்றும் சிறுதுளி இணைந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், சென்னை மாவட்டங்களில் நன்னீர் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் குளங்களை தூர் வாரி, கொள்ளளவை அதிகப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, குளத்தின் நடுவில் பெர்கோலேஷன் ஷாஃப்ட் (மழைநீர் சேகரிப்பு) அமைக்கப்படுகிறது. இதனால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

நன்னீர் திட்டத்தின் கீழ், இதுவரை 18 நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு, 2000 மில்லியன் லிட்டருக்கு மேல் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 21,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முன்பு ஒரு போகம் மட்டுமே பயிர் செய்த விவசாயிகள், தற்போது வருடத்திற்கு மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இத்தகைய சமூக மாற்றத்திற்கான பணிகளை ஆய்வு செய்த CSR Universe, சிறுதுளி அமைப்பிற்கு இந்த தேசிய அளவிலான விருதினை வழங்கியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...