உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் சோதனை செய்யாத சுகாதாரத் துறை

உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் நிபா வைரஸ் பரிசோதனை செய்யாததால் தமிழகத்தில் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



Coimbatore: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியான நிலையில், கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதியில் சுகாதாரத் துறையினர் வாகன ஓட்டிகளை பரிசோதித்து வருகின்றனர். ஆனால், உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையான ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் நிபா வைரஸ் பரிசோதனை பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் தமிழகத்திற்குள் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடுமலை-மூணாறு சாலை வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.



கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை-மூணார் சாலையில் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோய் தொற்றுடன் வருகின்ற நபர்களால் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் தொடர வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வரும் முன்பு காப்பதே சிறந்த வழிமுறையாகும் என்றும், பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஒன்பதாறு சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையான அறிவிப்பு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...