கோவை தெற்கு தொகுதியில் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் விளக்கினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்றார்.



"அம்மாவின் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். சித்தாப்புதூர் பகுதியில் எச் ராஜாவுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.

ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முப்பது பேர் வரை இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், "இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது," என்றார்.



தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பசுமை படை மாணவர் அமைப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளேன். எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் நடுகிறோம். சிறுதுளி அமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தெற்கு சட்டமன்ற தொகுதியின் பொது இடங்களில் எல்லாம் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம்," என்று தெரிவித்தார்.

மேலும், கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள விஸ்வேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிலும் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து, அங்கிருந்த விஸ்வகர்மா சமூக மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...