கோவை தெற்கு தொகுதியில் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் விளக்கினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்றார்.



"அம்மாவின் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். சித்தாப்புதூர் பகுதியில் எச் ராஜாவுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.

ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முப்பது பேர் வரை இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், "இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது," என்றார்.



தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பசுமை படை மாணவர் அமைப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளேன். எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் நடுகிறோம். சிறுதுளி அமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தெற்கு சட்டமன்ற தொகுதியின் பொது இடங்களில் எல்லாம் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம்," என்று தெரிவித்தார்.

மேலும், கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள விஸ்வேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிலும் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து, அங்கிருந்த விஸ்வகர்மா சமூக மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...