மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகிலுள்ள குட்டையில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைகளை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டையில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார்கள் வைத்து வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்துக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முதலைகள் தென்பட்டதாக கூறப்படும் குட்டையை சுற்றி கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதலைகள் வெளியேறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றியவுடன் முதலைகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...