மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகிலுள்ள குட்டையில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைகளை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டையில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார்கள் வைத்து வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்துக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முதலைகள் தென்பட்டதாக கூறப்படும் குட்டையை சுற்றி கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதலைகள் வெளியேறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றியவுடன் முதலைகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...