கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவைக்கு வரும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் குமரேஷ், உதவி ஆய்வாளர் கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார், கோவை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் டைகர் உதவியுடன் நேற்று (செப்டம்பர் 16) சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, ஒடிஸா மற்றும் ஆந்திரம் வழியாக கோவைக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அதில் வந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, தன்பாத் ரயிலில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஒடிஸா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து கோவை வழியாக கேரளத்துக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதைக் கண்காணித்துப் பிடித்து வருகிறோம். அதன்படி, கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா கடத்தி வந்த 20 பேரை கைது செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...