கோவையில் மிலாடி நபி விழா: இஸ்லாமியர்கள் ஊர்வலம், சிறுவர்கள் நடனம்

கோவையில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர். நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர்.



கோவை: கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். உலகம் முழுவதும் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. குறிப்பாக, செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர்.



இஸ்லாமிய சிறுமிகள் மிலாடி நபி கொடி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு வகுத்த வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர். உலக மக்கள் பாகுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், சாதி மத பேதம் இன்றி ஏழை பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்தனர்.

இமாம்கள் பேசுகையில், "நபிகள் நாயகம் எடுத்துரைத்த வாழ்வியல் நெறிமுறைகளை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...