கோவையில் மிலாடி நபி விழா: இஸ்லாமியர்கள் ஊர்வலம், சிறுவர்கள் நடனம்

கோவையில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர். நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர்.



கோவை: கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். உலகம் முழுவதும் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. குறிப்பாக, செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர்.



இஸ்லாமிய சிறுமிகள் மிலாடி நபி கொடி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு வகுத்த வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர். உலக மக்கள் பாகுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், சாதி மத பேதம் இன்றி ஏழை பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்தனர்.

இமாம்கள் பேசுகையில், "நபிகள் நாயகம் எடுத்துரைத்த வாழ்வியல் நெறிமுறைகளை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...