மிலாது நபி விழா: 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவையில் மிலாது நபி விழாவையொட்டி 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.



கோவை: கோவை மாநகரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இறைத்தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.



இதனையொட்டி, பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்த மாபெரும் உணவு தயாரிப்பிற்காக 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோவுக்கும் அதிகமான பிரியாணி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



மேலும், டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.



250 பெரிய அளவிலான பாத்திரங்களில் 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க உள்ளனர். இதற்கு முன்னதாக, மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...