நிபா வைரஸ் அச்சம்: கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக கோவை மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


Coimbatore: கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் பெங்களூரில் இருந்து மலப்புரம் வந்த நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் செப்டம்பர் 9 அன்று உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, 24 வயது இளைஞர் ஒருவர் செப்டம்பர் 15 அன்று நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட திருவல்லி மற்றும் மம்பத் கிராமப் பஞ்சாயத்துகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 16 முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைவரும் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கை நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...