பள்ளேபாளையம் அருகே குட்டையில் இரண்டு முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பள்ளேபாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முதலை தென்பட்ட நிலையில், தற்போது அதே குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இது குறித்த தகவல் சிறுமுகை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வனத்துறையினர் முதலைகள் உள்ள குட்டையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து, அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

விரைவில் அந்த குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...