கோவையில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். GST கூட்டத்தில் தொழில்முனைவோரை அவமானப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Coimbatore: கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில், திமுக மற்றும் இந்திய கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக நடத்தப்பட்டது.

கோவை GST கூட்டத்தில் தொழில்முனைவோரை அவமானப்படுத்தி, மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமனின் செயலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 16-9-2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வில் திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா எஸ்.ஜெயகுமார், மதிமுக ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், சி.பி.ஐ.எம். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சிவசாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குமணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், திமுக இந்திய கூட்டணிக் கட்சிகளின் நகர, ஒன்றிய, பகுதி, வார்டு, பேரூராட்சி செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...