கோவை கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

கோவை கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடல், கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் இருந்த நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.



தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பும் கூட தொடர்ந்து கட்டண வசூலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி இன்று நடத்தியது.

போராட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்:

1. காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும்

2. ஆண்டுதோறும் இரு முறை கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும்

3. புதிதாக தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் திறக்கப்படக் கூடாது

மேலும், அரசு நிர்ணயித்த விதிகளின்படி பல சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி, விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணம் மற்றும் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...