கோவை கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

கோவை கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடல், கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் இருந்த நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.



தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பும் கூட தொடர்ந்து கட்டண வசூலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி இன்று நடத்தியது.

போராட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்:

1. காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும்

2. ஆண்டுதோறும் இரு முறை கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும்

3. புதிதாக தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் திறக்கப்படக் கூடாது

மேலும், அரசு நிர்ணயித்த விதிகளின்படி பல சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி, விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணம் மற்றும் சிகிச்சைக்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...