கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் டிஆர்பி ராஜா அளித்த புதிய தகவல்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் வெளியிட்டுள்ளார். விரைவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் YES எனும் சர்வதேச நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து மைதானத்திற்கான இடத்தை தேர்வு செய்தார். தற்போது அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. விரைவில் மிகப் பிரம்மாண்டமாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" என உறுதியளித்தார்.



ஏற்கனவே, கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் என நான்கு இடங்கள் கண்டறியப்பட்டன. இதில், கோவை ஒண்டிபுதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அந்தப் பகுதி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு, விளையாட்டுத் துறை சார்பில் ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...