கேரள மீன் கழிவுநீரை பொள்ளாச்சி அருகே கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். வாகனம் காவல் நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் கொட்டப்பட்டதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்த விவரம்:

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள எம்பிஎன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்காக மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது.



இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...