தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்தில் புதருக்குள் சென்று மாயமானது. டிசம்பர் 31ல் மூதாட்டியை தாக்கி உயிரிழக்கச் செய்த காட்டெருமையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுவனப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக ஒரு காட்டெருமை சுற்றித்திரிந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் திடீரென மாயமாகி வனத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த காட்டெருமை அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை இந்த காட்டெருமை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து வனத்துறையினர் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

அதன் பின்னரும் அட்டுக்கல், தாளியூர் வன எல்லைப் பகுதிகளில் காட்டெருமை சுற்றித்திரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை அந்த காட்டெருமை தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்தனர். அப்போது காட்டெருமை அருகிலிருந்த புதருக்குள் சென்று திடீரென மாயமானது. அதன் பின்னர் அது எங்கும் தென்படவில்லை.

இது காட்டுக்குள் திரும்பிச் சென்றதா அல்லது வேறு பகுதிக்கு நகர்ந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...