கேரள மீன் கழிவுநீரை பொள்ளாச்சி அருகே கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். வாகனம் காவல் நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் கொட்டப்பட்டதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்த விவரம்:

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள எம்பிஎன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்காக மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது.



இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...