நாளை மிலாடி நபி பண்டிகை: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.


தமிழக அரசு, நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நாளை அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் ஆகியவை மூடப்படும். பொதுமக்கள் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...