நாளை மிலாடி நபி பண்டிகை: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.


தமிழக அரசு, நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நாளை அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் ஆகியவை மூடப்படும். பொதுமக்கள் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...