கோவை சங்கனூரில் கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கோவை சங்கனூர் அருகே கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. தூத்துக்குடி கூபா டைவிங் குழுவினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


Coimbatore: கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்ற இளைஞர், திருமணம் ஆகாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை, விஜயராகவன் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 15 அன்று கோவை வந்தடைந்த கூபா டைவிங் குழுவினர், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்டு கிணற்றிற்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் நான்கு நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...