கோவை சங்கனூரில் கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கோவை சங்கனூர் அருகே கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. தூத்துக்குடி கூபா டைவிங் குழுவினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


Coimbatore: கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்ற இளைஞர், திருமணம் ஆகாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை, விஜயராகவன் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 15 அன்று கோவை வந்தடைந்த கூபா டைவிங் குழுவினர், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்டு கிணற்றிற்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் நான்கு நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...