ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர். அத்திப்பூ கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன.



Coimbatore: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையின் போது மகாபலி மன்னன் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...