அன்னபூர்ணா விவகாரம்: நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



Coimbatore: கோவை ஆர்.எஸ். புரம் காந்தி பார்க் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "பன் மாலை" அணிந்தும், பங்கேற்பாளர்களுக்கு "க்ரீம் பன்" வழங்கியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு, தனது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "முதலில் அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும், அதனை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு. அவர் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை. தொழிலாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

"இதனை பாசிசத்தின் உச்சம் என நாங்கள் கண்டிக்கிறோம். உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும்" என்று செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

வீடியோவில் சீனிவாசனின் உடல்மொழி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "அந்த வீடியோவில் பார்க்கும் போது அவரால் இருக்கையில் நன்றாக கூட அமர முடியவில்லை. அவர் அடிமையா? இந்த தேசத்திற்கு வரி கட்ட கூடியவர். பல்லாயிரம் தொழிலாளிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருபவர் அவர் ஏன் கூனிக்குறுகி அமர வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஒரு நிதி அமைச்சரை சந்திக்க மற்ற கட்சியினர் செல்ல முடியுமா? இதைத் திட்டமிட்டு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று செல்வப்பெருந்தகை தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...