அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: கோவை R.S புரம் காந்திபார்க் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னபூர்ணா சீனிவாசனை மத்திய நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



செல்வப்பெருந்தகை தனது உரையில், "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை ஒடுக்கி அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட பிறகும் தமிழகத்திற்கு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை. உண்டியலில் பணம் போட்டால் அரசுக்குச் செல்லும் ஆனால் ஐயர் தட்டில் பணம் போட வேண்டும் என்று பக்தர்களை கோவிலில் வலியுறுத்தியுள்ளார்" என்று நிர்மலா சீதாராமனின் செயல்களை விமர்சித்தார்.

"மெட்ரோ இரயிலின் 2-ம் கட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்தும், தற்போது தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறார். ஆட்சியை தக்க வைப்பதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு லட்சக்கணக்கான கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும்" என்றும் செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

"அன்னபூர்ணா பிரச்சனை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.



கூட்டம் முடிவில் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை க்ரீம் பன் வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...