கோவையில் உரிமம் இல்லாமல் கிராவல் மண் கடத்திய நபர் கைது: டிப்பர் லாரி மற்றும் மண் பறிமுதல்

கோவையில் துடியலூர் - பன்னிமடை சாலையில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். வருவாய் துறை அதிகாரிகள் டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் செப்டம்பர் 13 ஆம் தேதி, உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த லாரியை வருவாய் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கடத்தப்பட்ட கிராவல் மண்ணை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை கலெக்டர் அலுவலக சிறப்பு வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் துடியலூர் - பன்னிமடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழனிகவுண்டன் புதூர் அருகே வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விஜயகுமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் விதமாக காவல்துறையினர் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர்.

கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சாலமோன் ராஜ் (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி மணல் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...