கோவை மாநகராட்சி ஆணையாளர் பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் விநியோக வால்வு தொட்டி மூடியை சரிசெய்ய உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 14) வடக்கு மண்டலம் வார்டு எண் 26-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.



பாலகுரு கார்டன் முதல் எல்லைத்தோட்டம் வரை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும், பீளமேடு, விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள குடிநீர் விநியோகத்திற்கான வால்வு தொட்டியின் மூடியினை சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...