கோவை மாநகராட்சி ஆணையாளர் பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் விநியோக வால்வு தொட்டி மூடியை சரிசெய்ய உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 14) வடக்கு மண்டலம் வார்டு எண் 26-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.



பாலகுரு கார்டன் முதல் எல்லைத்தோட்டம் வரை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும், பீளமேடு, விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள குடிநீர் விநியோகத்திற்கான வால்வு தொட்டியின் மூடியினை சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...