கோவை மாநகராட்சி ஆணையாளர் பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் விநியோக வால்வு தொட்டி மூடியை சரிசெய்ய உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 14) வடக்கு மண்டலம் வார்டு எண் 26-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.



பாலகுரு கார்டன் முதல் எல்லைத்தோட்டம் வரை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும், பீளமேடு, விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள குடிநீர் விநியோகத்திற்கான வால்வு தொட்டியின் மூடியினை சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...