பொள்ளாச்சியில் தபால் குறைகேட்பு கூட்டம் செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சியில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த தபால் குறைகேட்பு கூட்டம், பொதுவிடுமுறை காரணமாக செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தபால் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும் அவ்வப்போது நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுவிடுமுறை காரணமாக இந்தக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் செப்டம்பர் 13 அன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம். மேலும், தபால் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...