பொள்ளாச்சியில் தபால் குறைகேட்பு கூட்டம் செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சியில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த தபால் குறைகேட்பு கூட்டம், பொதுவிடுமுறை காரணமாக செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தபால் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும் அவ்வப்போது நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுவிடுமுறை காரணமாக இந்தக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் செப்டம்பர் 13 அன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம். மேலும், தபால் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...