பத்திரிகை சுதந்திர தினம் இன்று...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் நாள் சர்வதேச பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அரசின் குறைகளையும் மற்றும் மக்களின் தேவைகளையும் எழுத்தின் மூலமாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை பெறுகின்ற உன்னத பணியை மேற்கொள்ளும் ஒருவரே உண்மையான பத்திரிகையாளராகிறார்.

அவ்வாறு பத்திரிகையாளர் ஒருவர் நிதர்சனங்களை எழுதும் பொழுது அவருக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் நாள் கொலம்பிய பத்திரிகையாளர் கிலேர்மோ கானோ இசாசா என்ற பத்திரிகையாளர் ஒருவர், அவரது அலுவலத்தின் முன்பு சமூக விரோதிகள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பிறகே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றது.

பத்திர்கை சுதந்திரத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இந்நாளில் யுனெஸ்கோ சார்பில் கிலேர்மோ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுமார் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்றால் சிறந்த பத்திரகை சுதந்திர போராளி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 25 டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மகராஷ்டிரா முன்னோடியாக திகழ்கிறது. அங்கு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களை பாதுக்காக்கும் விதமான இச்சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...