கோவை போத்தனூரில் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது

கோவை போத்தனூரில் பெட்டிக்கடை நடத்தும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் மற்றும் தொழிலாளி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நேற்று (செப்.12) நடந்தது.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முரளி (வயது 25) என்பவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (செப்.12) கடை அருகே நின்றிருந்த முரளியிடம் அங்கு வந்த இரண்டு பேர் மது குடிக்க பணம் கேட்டனர். முரளி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர்.

அதிர்ச்சியடைந்த முரளி உரத்த குரலில் சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து முரளி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (வயது 33) மற்றும் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (வயது 32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...