கோவை போத்தனூரில் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது

கோவை போத்தனூரில் பெட்டிக்கடை நடத்தும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் மற்றும் தொழிலாளி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நேற்று (செப்.12) நடந்தது.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முரளி (வயது 25) என்பவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (செப்.12) கடை அருகே நின்றிருந்த முரளியிடம் அங்கு வந்த இரண்டு பேர் மது குடிக்க பணம் கேட்டனர். முரளி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர்.

அதிர்ச்சியடைந்த முரளி உரத்த குரலில் சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து முரளி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (வயது 33) மற்றும் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (வயது 32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...