கோவையில் தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை: மூன்றாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது

கோவை சங்கனூரில் விஜயராகவன் என்ற தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் உடலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்த விஜயராகவன் என்ற தொழிலாளி, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



விஜயராகவன் என்ற விஜய், சங்கனூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத அவர், பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்ததாகவும், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஜயராகவன், அருகிலுள்ள சண்முகம் என்பவருக்குச் சொந்தமான 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் உயிரற்ற நிலையில் கிடந்த விஜயராகவனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி, மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...