தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம் நடைபெற்றது. பயிர் சிலந்திகள் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய பூச்சியியல் துறையில், அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் கூடும் ஐந்தாண்டிற்கு ஒரு முறையான கூட்டம் (2012-2023) 11.09.2024 அன்று நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மா.சாந்தி தொடக்க உரையாற்றினார். அவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் சிலந்திகள் ஆராய்ச்சியின் துவக்கம், நோக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய வகை பயிர் சிலந்திகள் அதன் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.



கூட்டத்தின் தலைவரான தோட்டக்கலை துறை முன்னாள் இணை இயக்குநர் முனைவர் நா.க.கிருஷ்ணகுமார், பயிர்களை தாக்கும் சிலந்தி வகைகள், ஒருங்கிணைந்த பயிர் சிலந்திகள் மேலாண்மை, பயிர் சிலந்தி எதிர்ப்பு திறன் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, அயல் நாட்டு பயிர் சிலந்தி வகைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார். மேலும், பயிர் சிலந்திகள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், பயிர் சிலந்திகளால் ஏற்படும் மகசூல் இழப்பை வருமான இழப்பாக கருத வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஐந்தாண்டு கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் NCIPM இயக்குநர் முனைவர் சுபாஷ் சந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் கு.ராமராஜு, UAS பெங்களூரு முன்னாள் PGS தலைவர் முனைவர் ந.ஸ்ரீனிவாசா, CSKHPKV பலம்பூர் முன்னாள் பேராசிரியர் மற்றும் பூச்சியியல் துறை தலைவர் முனைவர் ரவீந்தர் சிங்க் சந்தல், மண் கணுக்காலி பூச்சிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அர்ஜுன் சிங்க் பாலோடா மற்றும் UAS பெங்களூரு பயிர் சிலந்திகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.சின்னமாதே கௌடா ஆகியோர் அடங்குவர்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ம.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்வில் பூச்சியியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், மண் கணுக்காலி பூச்சிகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் முனைவர் எ. சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...