கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த மோகன் (எ) மோகன்ராஜ் (65) என்ற கூலித் தொழிலாளி, தனது பேரனுடன் விளையாடி வந்த 12 வயது சிறுமிக்கு 2022 ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிபதி குலசேகரன் செப்டம்பர் 12 அன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, மோகன்ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஓராண்டு சிறையுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிபதி குலசேகரன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....