கோவை ஏஜேகே கல்லூரியில் விமரிசையான ஓணம் கொண்டாட்டம்: ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி

கோவை ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.

மாணவிகள் அலுவலக கட்டிடத்திற்குள் பல்வேறு மலர்களால் கண்கவர் அத்தப்பூ கோலமிட்டனர். கல்லூரி வளாகத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களில் பாடல்கள் ஒலிக்க, சண்ட மேளம் உள்ளிட்ட பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்கின. மாணவர்கள் ஆடி பாடி குதித்து உற்சாக நடனம் ஆடினர்.



அத்தப்பூ கோலத்தைச் சுற்றி பாரம்பரிய உடையில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினி ஆட்டம் ஆடி காட்டினர். தொடர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் களரி தற்காப்பு பயிற்சியை செய்து காட்டினர். இந்த பாரம்பரிய நடனமும் தற்காப்பு கலையும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.



விழாவின் போது அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்தளிக்கப்பட்டது. கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, வானில் வட்டமிட்டு கல்லூரியின் மைதானத்தில் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை அனைவரும் கண்டு வியந்தனர்.



ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மகாபலிக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த விமரிசையான ஓணம் கொண்டாட்டம் மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.



Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...