அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: எம்.பி. செ.ஜோதிமணி

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கூறிய கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி தொடர்பான கருத்தை முன்வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒருவர், தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளும் கருத்தை செவிமடுத்து, அதை சரிசெய்ய வேண்டியது நிதியமைச்சரின் கடமை என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை செய்யாமல் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும், அறுவெறுப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?" என்று செ.ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துவதாகவும், பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு" என்றும் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், சீனிவாசனுக்கு தனது அன்பையும் ஆதரவையும் தெரிவிப்பதாகவும் செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...