அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: எம்.பி. செ.ஜோதிமணி

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கூறிய கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி தொடர்பான கருத்தை முன்வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒருவர், தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளும் கருத்தை செவிமடுத்து, அதை சரிசெய்ய வேண்டியது நிதியமைச்சரின் கடமை என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை செய்யாமல் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும், அறுவெறுப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?" என்று செ.ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துவதாகவும், பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு" என்றும் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், சீனிவாசனுக்கு தனது அன்பையும் ஆதரவையும் தெரிவிப்பதாகவும் செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...