மேட்டுப்பாளையம் அருகே ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஏகே செல்வராஜ்

மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான வசதிகளுடன் கூடிய இந்த மையம் பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் புதிய பாத்திரத்தில் பால் பொங்கல் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணிகளைத் துவக்கினர். மேலும், அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களை வைத்து குத்து விளக்கும் ஏற்றப்பட்டது.



புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் விலங்குகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி குழந்தைகளின் ஆரம்பகால கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...