கோவையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு

கோவை காந்திபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15 அன்று நடைபெறவுள்ளது. கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் மரியாதை நிகழ்வில் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், BLA 2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தோழர்கள் மற்றும் கழக முன்னணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" எனும் கோட்பாடுகளை வலியுறுத்தியவரும், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவருமான பேரறிஞர் அண்ணா, 1967இல் முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...