மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் ஜிஎஸ்டி, வங்கி அபராதம், விஸ்வகர்மா திட்டம், மணிப்பூர் விவகாரம், சென்னை மெட்ரோ மற்றும் ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கூறிய கருத்து குறித்து விளக்கமளித்த அமைச்சர், அவர் தனது பாணியில் ஜனரஞ்சகமாக பேசியுள்ளதாகவும், ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்து அமைச்சர்களின் குழு தீவிர ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். மேலும், ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகள் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பங்கீடு குறைவாக வழங்கப்படுவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், பெறப்படும் வரியில் 50% மத்திய அரசிற்கும், 50% மாநில அரசிற்கும் செல்வதாகவும், மத்திய அரசின் பங்கில் 41% மாநிலங்களுக்கு திரும்ப செல்வதாகவும் விளக்கினார். வரி பங்கீட்டை நிர்ணயிப்பது நிதி ஆணையம் என்றும், அதனை மாற்ற தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததற்கு அபராதம் விதிக்கப்படுவதாக எழுந்த கேள்விக்கு, இது தவறான தகவல் என்றும், ஜன் தன், கரண்ட், சேவிங்ஸ் கணக்குகளுக்கு அபராதம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

விஸ்வகர்மா திட்டம் குறித்து பேசிய அமைச்சர், இது ஜாதி சார்ந்தது அல்ல என்றும், 18 குறிப்பிட்ட தொழில்களை செய்பவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், உள்துறை அமைச்சர் அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அனைத்து தரப்பினரையும் சந்தித்ததாக தெரிவித்தார். மேலும், மிசோரம் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், மத்திய அரசின் பங்களிப்பு இருப்பதாக உறுதியளித்தார்.

ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், அவர் இந்தியாவிற்கு எதிரான நபர்களை சந்தித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் கட்சி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...