உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி செப்டம்பர் 11 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கி மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள், சுங்கம் சந்திப்பு செல்வதற்கான வழித்தடம் செப்டம்பர் 11 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து செல்வோரும் உக்கடம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, ரூ.481.95 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது, சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் செல்வதற்கான ஏறு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்படாமல் இருந்தது. இப்பணியை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விபத்துகளைத் தவிர்க்க, தேவையான இடங்களில் சாலை பாதுகாப்பு ஒளிப்பான் ஒட்டவும், அறிவிப்பு பலகை வைக்கவும், மின் விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் முகாமிட்டு ஆய்வு செய்தனர். வாகனங்கள் தடங்கலின்றி சீராக சென்றதால், வாலாங்குளம் ரோட்டில் உள்ள ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் உக்கடம் மேம்பாலத்தைப் பயன்படுத்தி, ஆத்துப்பாலம் சந்திப்பு வழியாக பொள்ளாச்சி ரோடு அல்லது பாலக்காடு ரோடு செல்லலாம். அதேபோல், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இறங்கு தளம் மூலமாக இறங்கிச் செல்லலாம்.

அடுத்த கட்டமாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன்பும், ஆத்துப்பாலம் சந்திப்பிலும் நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும், செடிகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...