உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி செப்டம்பர் 11 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கி மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள், சுங்கம் சந்திப்பு செல்வதற்கான வழித்தடம் செப்டம்பர் 11 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து செல்வோரும் உக்கடம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, ரூ.481.95 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது, சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் செல்வதற்கான ஏறு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்படாமல் இருந்தது. இப்பணியை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விபத்துகளைத் தவிர்க்க, தேவையான இடங்களில் சாலை பாதுகாப்பு ஒளிப்பான் ஒட்டவும், அறிவிப்பு பலகை வைக்கவும், மின் விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் முகாமிட்டு ஆய்வு செய்தனர். வாகனங்கள் தடங்கலின்றி சீராக சென்றதால், வாலாங்குளம் ரோட்டில் உள்ள ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் உக்கடம் மேம்பாலத்தைப் பயன்படுத்தி, ஆத்துப்பாலம் சந்திப்பு வழியாக பொள்ளாச்சி ரோடு அல்லது பாலக்காடு ரோடு செல்லலாம். அதேபோல், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இறங்கு தளம் மூலமாக இறங்கிச் செல்லலாம்.

அடுத்த கட்டமாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன்பும், ஆத்துப்பாலம் சந்திப்பிலும் நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும், செடிகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...