கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்: மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார். சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை, வேளாண்துறை, இலவச வீட்டு மனை பட்டா, கூட்டுறவு கடன் சங்கம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 275 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "கோவை மாவட்டத்தில் வேர் வாடல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக முதல்வர் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதில் 13 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...