கோவை மாநகராட்சி பொறியாளரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

கோவை மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் விமல்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வரும் விமல்ராஜ் (42) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர்.

விமல்ராஜ் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார். அவருக்கு வஉசி பூங்கா அலுவலக வளாகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, இந்தக் குழுவினர் விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...