கோவை மாநகராட்சி பொறியாளரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

கோவை மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் விமல்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வரும் விமல்ராஜ் (42) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர்.

விமல்ராஜ் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார். அவருக்கு வஉசி பூங்கா அலுவலக வளாகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, இந்தக் குழுவினர் விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...