கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்

கோவையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி இன்று (செப்டம்பர் 11) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதையொட்டி இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் புறவழிச் சாலை, செல்வபுரம் சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் புறவழிச் சாலை, சிவாலயா திரையரங்க சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் புறவழிச் சாலை வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்எஸ்ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை, ஏஆர்சி சந்திப்பு, சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலம் வட கோவை மேம்பாலத்தையும், சென்ட்ரல் திரையரங்கத்தையும் கடந்த பிறகு வட கோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்லலாம். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பேரூர் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரூர் சாலையிலிருந்து தடாகம் செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராம மூர்த்தி சாலை, பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி சாலை வழியாக தடாகம் சாலையில் செல்லலாம்.

விநாயகர் சிலை ஊர்வலப் பாதையான ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார்ப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் சாலை, பால் மார்க்கெட் சாலை, டி.பி.சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, தடாகம் சாலை, பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...