தென்னக ரயில்வேயில் முதலிடம் பிடித்த சென்னை மத்திய ரயில் நிலையம்; கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில்

2023-24 ஆம் ஆண்டில் தென்னக ரயில்வேயின் முதல் 10 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


கோவை: தென்னக ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 10 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1300 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1.95 கோடி பயணிகளுடன் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம் 1.02 கோடி பயணிகளை கையாண்டு ரூ.345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் 1.27 கோடி பயணிகளுடன் ரூ.281 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் 3.27 கோடி பயணிகளை கையாண்டு ரூ.246 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆறாவது இடத்தில் எர்ணாகுளம் ஜங்ஷன் 88 லட்சம் பயணிகளுடன் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏழாவது இடத்தில் மதுரை ரயில் நிலையம் 75 லட்சம் பயணிகளுடன் ரூ.224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எட்டாவது இடத்தில் கோழிக்கோடு ரயில் நிலையம் 1.14 கோடி பயணிகளுடன் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 79 லட்சம் பயணிகளுடன் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பத்தாவது இடத்தில் திருச்சூர் ரயில் நிலையம் 69 லட்சம் பயணிகளுடன் ரூ.164 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...