தென்னக ரயில்வேயில் முதலிடம் பிடித்த சென்னை மத்திய ரயில் நிலையம்; கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில்

2023-24 ஆம் ஆண்டில் தென்னக ரயில்வேயின் முதல் 10 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


கோவை: தென்னக ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 10 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1300 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1.95 கோடி பயணிகளுடன் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம் 1.02 கோடி பயணிகளை கையாண்டு ரூ.345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் 1.27 கோடி பயணிகளுடன் ரூ.281 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் 3.27 கோடி பயணிகளை கையாண்டு ரூ.246 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆறாவது இடத்தில் எர்ணாகுளம் ஜங்ஷன் 88 லட்சம் பயணிகளுடன் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏழாவது இடத்தில் மதுரை ரயில் நிலையம் 75 லட்சம் பயணிகளுடன் ரூ.224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எட்டாவது இடத்தில் கோழிக்கோடு ரயில் நிலையம் 1.14 கோடி பயணிகளுடன் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 79 லட்சம் பயணிகளுடன் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பத்தாவது இடத்தில் திருச்சூர் ரயில் நிலையம் 69 லட்சம் பயணிகளுடன் ரூ.164 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...