தென்னக ரயில்வேயில் முதலிடம் பிடித்த சென்னை மத்திய ரயில் நிலையம்; கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில்

2023-24 ஆம் ஆண்டில் தென்னக ரயில்வேயின் முதல் 10 ரயில் நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


கோவை: தென்னக ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 10 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மத்திய ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை மத்திய ரயில் நிலையம் 3.05 கோடி பயணிகளை கையாண்டு ரூ.1300 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1.95 கோடி பயணிகளுடன் ரூ.600 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம் 1.02 கோடி பயணிகளை கையாண்டு ரூ.345 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காவது இடத்தில் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் 1.27 கோடி பயணிகளுடன் ரூ.281 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் 3.27 கோடி பயணிகளை கையாண்டு ரூ.246 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆறாவது இடத்தில் எர்ணாகுளம் ஜங்ஷன் 88 லட்சம் பயணிகளுடன் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏழாவது இடத்தில் மதுரை ரயில் நிலையம் 75 லட்சம் பயணிகளுடன் ரூ.224 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எட்டாவது இடத்தில் கோழிக்கோடு ரயில் நிலையம் 1.14 கோடி பயணிகளுடன் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் 79 லட்சம் பயணிகளுடன் ரூ.165 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. பத்தாவது இடத்தில் திருச்சூர் ரயில் நிலையம் 69 லட்சம் பயணிகளுடன் ரூ.164 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...