பொள்ளாச்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை

பொள்ளாச்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவிபாளையம் முதல் மூலனூர் வரையிலான புதிய சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு) மற்றும் பொள்ளாச்சி தெற்கு (வடக்கு) ஒன்றியங்களில் இன்று (செப்டம்பர் 10) பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அனுப்பர்பாளையம் ஊராட்சி ஆலம்பாளையம் கிராமத்தில், கனிமம் மற்றும் சுரங்கத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், சின்ன நெகமம் ஊராட்சியில் 2024-2025-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உதவிபாளையம் முதல் மூலனூர் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டங்கள் பொள்ளாச்சி பகுதியின் நீர் மேலாண்மை மற்றும் சாலை இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும், புதிய சாலை பொள்ளாச்சி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...